தமிழக முதலமைச்சருக்கு புது தில்லியில் உற்சாக வரவேற்பு!

புது தில்லி : தமிழ்நாடு இல்லத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள் மலர்க்கொத்து வழங்கி முதலமைச்சரை அன்புடன் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு இல்ல வளாகத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வு சிறப்பாகவும், மரியாதையுடனும் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *