
சென்னை, ஜூலை 14:
சென்னை தலைமைச் செயலகத்தில், தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் அவர்களை, மார்னிங் டைம்ஸ் சென்னை மாவட்ட செய்தியாளர் ரியாஸ் அலி செவ்வாய்க்கிழமை (14.07.2026) மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, அமைச்சருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்த முயன்ற செய்தியாளர் ரியாஸ் அலிக்கு, அமைச்சர் அதே சால்வையை அணிவித்து கவுரவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி செயல்பாடுகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பாக நடைபெற்றது.